1. வெற்றியாளர்கள் பரிசளிக்கப்பட்டவர்கள் அல்ல.
அவர்கள் கடினமான உழைப்பால் வெற்றியை பரிசாக பெற்றுக் கொண்டவர்கள்.
யாரவது வந்து உங்களை உயரத்தில் வைப்பார்கள் என்று காத்திருக்காதீர்கள்.
நீங்கள் தன்னந்தனியாக தான் உயரத்திற்கு வந்து சேர வேண்டும்.

2. முதுகுக்கு பின்னாடி பேசி துரோகி ஆவதை விட.........
முகத்துக்கு முன்னாடி பேசி எதிரி ஆவது மேல்............!!

3. நமக்கு நாம் மட்டும் தான் என்று இந்த வாழ்க்கை நமக்கு அடிக்கடி சொல்லும்
ஆனால் அதை நம்பாமல் நாம் யாரையோ நம்புவோம்

4. எவன் ஒருவன் தன் அறிவின் அகந்தையால்
பிறரை அவமதிக்கின்றானோ,
அவன் அறிவுடையோன்‌ என்றாலும் மந்தப் புத்தியுடையவன்...!!

5. உன்னால் செய்ய முடியாததை,
கடைபிடிக்க முடியாததை,
மற்றவர்களிடம் எதிர்பார்க்காதே.!!

6. நீ தியாகம் செய்யத் தயாராக இருந்தால் மட்டுமே,
உலகிலுள்ள மற்றவர்களை வெல்ல முடியும்.

7. உன்னைப் பற்றி எண்ணாத நேரத்தில் மட்டுமே,
நன்மையையும், உண்மையான வாழ்க்கையையும் நீ அனுபவிக்கிறாய்.

8. எதையும் தெரியாது என்று சொல்லாதே.
சாதிக்கும் துணிவோடு அஞ்சாதப் போர்வீரனைப் போல செயல்படு.

9. ஆசைக்குக் கண்ணில்லை. அது மனிதனை நரகத்தில் தள்ளி விடும்.
அன்பில் கரைந்து விடு. அது உன்னை சொர்க்கத்தில் சேர்த்து விடும்.

10. எதிர்ப்புகள் இருக்கிறதே என்பதற்காக உன் கருத்துக்களை முடக்காதே,
தற்போது அங்கீகாரம் பெற்ற கருத்துக்கள் எல்லாம் ஒரு காலத்தில்  எதிர்க்கப்பட்டவைகளே.

11. எண்ணம் உறுதியாக இருந்தால் எண்ணியப்படி உயரலாம்.
நமது எண்ணம் தான் நம்முடைய எதிர்காலத்தை உருவாக்குகிறது..!!
எல்லோரும் நல்லவர்களாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், எல்லோரிடமும் ஏதோ ஒரு நல்ல விஷயம் இருக்கிறது.

12. எங்கே விழுந்தோம் என்பதைவிட எங்கே நம் கவனத்தை சிதற விட்டோம் என்பதை கவனித்து பாருங்கள்... அடுத்தமுறை விழவே மாட்டீர்கள்...!

13. வாழ்க்கையில், சில மனிதர்களிடம் கேள்வியையும், சில மனிதர்களிடம் பதில்களையும் எதிர்பார்க்காமல் இருப்பது நல்லது

14. புகழ் என்பது எப்போது வேண்டுமானாலும்
ஒரு சின்ன செயலின் மூலமாகவும் வரும்.
ஒழுக்கம் இருந்தால் மட்டுமே ஒரு சிறந்த மனிதராக
விளங்க முடியும் 

15. மாற்றங்கள் வரவேற்கத் தக்கது தான்......!!
அது வரவேற்கத் தக்க மாற்றங்களாக இருந்தால்.....!!

16. என்னை ரகசியமாக வீழ்த்தும் ஒரு நண்பரை விட ..
நேர்மையாக ஒப்புக்கொள்ளக் கூடிய
ஒரு எதிரி வேண்டும்...

17. அடிக்க அடிக்கத் தான் இரும்பு உறுதியாகும்!
அடி வாங்க வாங்கத் தான் உன் வாழ்க்கையும் வளமாகும்!

18. கஷ்டம் தெரியாமல் வளர்ந்துக் கஷ்டப்படுவதை விட.....!!
கஷ்டத்தோடு வளர்ந்து  கஷ்டம் இல்லாமல் வாழ்வதே மேல்.......!!

19. எதையும் கடந்தாக வேண்டும் எனும் பொழுது அதை விதி என்று கடக்க முயற்சிக்காதே.
மதியால் கடக்க முயற்சித்துப் பார்.
விதியை வெற்றியாக மாற்று...!!

20. நீ விதைத்தது தான், விதி என்ற ரூபத்தில் உன் முன்னால் நிற்கின்றது.
உன் தலையில் விதைத்தை நீ தான் அறுவடை செய்ய வேண்டும்.
களைகளை அகற்றி விட்டால் அறுவடை அமோகமாகும்.

21. வெற்றியடைந்தால் அதிர்ஷ்டத்தின் விதி.,
தோல்வியடைந்தால் தலைவிதி.
எதுவும் நடக்காவிட்டால் எல்லாம் என் விதி.
வாழ்க்கையில் விதிமுறைகளை உருவாக்காதவனே,
விதி என்கின்றான்.