வாழ்க்கை எனும் ஆழ்கடல் அனைவருக்கும் ஒன்றே தான் அதில் மூச்சடக்கி மூழ்கினால் முத்துக்கள் கிடைக்கும் தன் நம்பிக்கையுடன் உழைப்பு வலிமையுடன் வளைந்து வலை வீசினால் மீன்கள் கிடைக்கும் எதுவுமே செய்ய முன்வராமல் வாழ்க்கை எனும் கடலில் கரையை மட்டும் தொட்டால்,
கால்கள் மட்டுமே நனைந்து ஈரமாகும்

வாழ்க்கை ரணமாகும்

இனிய காலை வணக்கம்
Good Morning Quotes in Tamil
மற்றவர்கள் செய்யும் விமர்சனங்கள் பற்றி அதிகம் சிந்திக்க வேண்டாம்...
ஏனென்றால், அவர்கள் வெவ்வேறு சிந்தனை பாணிகளை கொண்டுள்ளனர். விமர்சனங்கள் உண்மையாக இருந்தால், உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்ளுங்கள். இல்லையெனில் உங்கள் வாழ்க்கை இலட்சியத்தில் மட்டும் கவனம் செலுத்தி முன்னேறுங்கள்...
நிலையான மனதைப் பெற, ஒவ்வொரு அதிகாலையிலும் உங்கள் மனதை சர்வ சக்தி வாய்ந்த இறைவனுடன் ஒன்றிணையுங்கள்..!!

நற்காலை வணக்கம்
உன்னை கவலை படுத்தும் அளவுக்கு ஒருவனுக்கு துணிச்சல் இருந்தால்... அதையும் தாண்டி மகிழ்ச்சியாக இருக்கும் அளவிற்கு உன்னிடம் தைரியம் இருக்க வேண்டும்...!

இனிய காலை வணக்கம்
விதை போராடுவதால் மட்டும் தான் மண்ணிலிருந்து வெளிவந்து ஒரு மரமாக கம்பீரமாக நிற்கிறது....

நாம் போராடினால் மட்டும் தான் துன்பங்களைக் கடந்து,தடைகளை உடைத்து கம்பீரமான மனிதராக வெற்றியுடன் மிளிர முடியும்.

இனிய காலை வணக்கம்
வெற்றி ஒரு நிழல் போலத் தொடரும் பிடிக்க முயற்சிக்காதீர்கள்.

நடந்து செல்லுங்கள் உங்கள் வழியில் அது தானாகவே உங்களைப் பின்தொடரும்..

நீங்கள் பிரகாசத்தை நோக்கி நடக்கும் போது தான் நிழல்கள் உங்களைப் பின்தொடரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்..

இனிய காலை வணக்கம்
வெற்றியின் மதிப்பை தோற்றவனிடம் கேட்டுத் தெரிந்துக் கொள்ளுங்கள்........

தோல்வியின் இழப்பை வென்றவனிடம் கேட்டுத் தெரிந்துக் கொள்ளுங்கள்,....!!

இனிய காலை வணக்கம்
இருள் என்று தெரிந்தும் கண்களைத் திறந்து கொண்டு தான் பயணிக்கிறோம். 

அது போல் தோல்வி என்று தெரிந்தாலும் முயற்சி செய்து கொண்டு இருப்போம் வெற்றி காணும் வரை.

இனிய காலை வணக்கம்
எந்தப் பாதையில் சென்றால் வெற்றி நிச்சயம் என்று ஆராய்வதை விட,

எந்தப் பாதையில் சென்றால் வெற்றி எளிது என்று தான் ஆராய்கிறார்கள்.*

எளிதான பாதையின் ஆபத்துகளை உணராமல்.

பாதைகள் எப்போதும் வெற்றியைத் தீர்மானிப்பதில்லை..

அங்கே நீங்கள் எடுக்கும் முயற்சி தான் தீர்மானிக்கும் உங்களின் வெற்றியை!

இனிய காலை வணக்கம்
வாழ்வில் தூண்டுகோலாக யாரை வேண்டுமானாலும் வைத்து கொள்ளலாம்....!
 ஆனால்...
ஊன்றுகோலாகத்தான் யாரையும் நம்பி இருந்துவிடக்கூடாது.

இனிய காலை வணக்கம்
கண்ணுக்குத் தெரிந்தப் போராட்டங்களை விட,
கண்ணுக்கே தெரியாதவையோடு போராடிப் பழகி விட்டோம்... 

போராட்டமா? 
வாழ்க்கையா? எனும் போது.,

வாழ்க்கை வெல்கிறது, 
உன் நம்பிக்கையால்.... 

எண்ணங்களில் உறுதியோடு இரு!.
எதிலும் உனக்கு.. 

வெற்றி நிச்சயம்!

உற்சாகமான காலை வணக்கம்.